fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்டத்தில் தெருவாழ்வோர் மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்ட ரவி, மல்லசமுத்திரத்தில் வாழும் அவரது மகள்களுடன்...

சேலம் மாவட்டத்தில் தெருவாழ்வோர் மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்ட ரவி, மல்லசமுத்திரத்தில் வாழும் அவரது மகள்களுடன் சேர்ப்பு

சேலம் மாவட்டத்தில் தெரு வாழ்வோர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சாலையோரம் வசித்து வந்த ரவி (வயது 60) த/பெ. குருசாமி என்பவரை மீட்டு, மாவட்ட கலெக்டர் கார்மேகம் அவர்களின் சீரிய முயற்சியால் அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் உள்ள அவரது மகள்களுடன் சேர்த்து மறுவாழ்வு கொடுக்கப்பட்டது.

அருகில் சேலம் மாநகர கூடுதல் துணை ஆணையர் கும்பராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, துணை ஆட்சியர் (பயிற்சி) கனிமொழி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பயிற்சி) ஷாபனா அஞ்சும் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img