கோவை மாநகர மேற்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியார் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி உறுதி ஏற்கும் நிகழ்ச்சி காளப்பட்டி அருகில் உள்ள நேரு நகரில் திராவிடன் அறக்கட்டளை தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வினோத், 35 வது வட்ட கழக செயலாளர் குணசேகரன், 41 வது வட்ட கழக செயலாளர் மரியராஜ், திராவிடர் தமிழர் கட்சி பேரறிவாளன், திராவிடர் விடுதலைக் கழக பேருதான், தமிழ்நாடு திராவிடர் கழக காசு.நாகராஜ் வி.பி.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் தொண்டர்களும், மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர்.



