கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின்படி, தெற்கு மண்டலம் வார்டு எண்.77க்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலுள்ள சண்முகராஜபுரத்தில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது, கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதை செல்வபுரம் நகர்நல மைய அலுவலர் பிரீத்தி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
உடன் மேற்பார்வையாளர் மாசிலாமணி மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.



