fbpx
Homeபிற செய்திகள்வால்பாறை: வீடுகள், பள்ளி கட்டிடத்தை நொறுக்கி சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை: வீடுகள், பள்ளி கட்டிடத்தை நொறுக்கி சேதப்படுத்திய காட்டு யானைகள்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஐயர் பாடி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஜான் டேவிட், இந்திரா மற்றும் பழனியம்மாள் ஆகியோரின் வீட்டு ஜன்னல் மற்றும் கதவை நேற்றிரவு மூன்று காட்டு யானைகள் உடைத்து நொறுக்கியுள்ளன.

மேலும் அந்த யானைகள் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பள்ளி கேண்டீனின் ஜன்னலையும் சேதப்படுத்தின.


இதனை அறிந்த எஸ்டேட் தொழிலாளர்கள் அந்த யானைகளைத் துரத்த முயன்றனர். அது முடியாமல் போனதால் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வன அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img