fbpx
Homeபிற செய்திகள்வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும் ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும் ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:

விவசாயிகள் சங்கம் ஜாதி மதம் கட்சி சார்பற்றது. எங்கள் சங்கத்தின் சார்பாக பல கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் மூலமாக முன்வைத்துள்ளோம்.
நாங்கள் அளிக்கும் மனுக்கள் மீது தக்க நடவடிக்கை மத்திய மாநில அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நேரடி போராட்டம் நடத்த உள்ளோம். வன உயிர்கள் பாதுகாப்பு சட்டம் திருத்தப் பட வேண்டும். வனத்திற்குள் சென்று வேட்டையாடுபவர்களுக்கு தண்டனை கொடுக்க இந்த சட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.

அதிலேயே தற்காப்புக்காக ஒரு விலங்கை கொலை செய்தால் குற்றம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பட்டா நிலத்திற்கு வரும் விலங்குகள் உயிருக்கும் பயிருக்கும் சேதம் விளைவிப்பதால் அப்பாவி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அதைப்போல் கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் நேரடியாக பொதுமக்களுக்கு வாடகைக்கு கொடுத்து விவசாய பூமிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img