fbpx
Homeபிற செய்திகள்ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சர்வதேச மகளிர் தினவிழா

ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சர்வதேச மகளிர் தினவிழா

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையமும், கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியமும் இணைந்து ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேற்று சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முதுநிலைய ஆய்வாளர் வரவேற்றுப் பேசினார். ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் மற்றும் முதல்வர் என்.ஸ்ரீதர் தலை மை தாங்கி பேசினார்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கோவை மண்டல கூட் டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன் கலந்துகொண்டு சிறப் புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் மகேஸ்வரி சற்குருவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய கௌரவ விரிவு ரையாளர் ரத்னவேல் அறிமுகப்படுத்தி பேசினார்.

விழாவின் சிறப்பு பேச்சாளாராகிய மகேஸ்வரி சற்குரு “பெண்ணே நீ பீனிக்ஸ் பறவை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நிறைவாக ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய விரிவுரையாளர் வித்யா, முதுநிலை ஆய் வாளர் நன்றியுரை வழங்கினார்.

மேற்படி விழாவில் கோவை மாவட்ட கூட் டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் பாரதி, கூட்டுறவு சார்பதிவாளர் கலந்து கொண்டார்.

மேற்படி விழாவின் பார்வையாள ராக ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img