fbpx
Homeபிற செய்திகள்மொபைல் ஆக்சிஜன் சேவையை துவக்கிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

மொபைல் ஆக்சிஜன் சேவையை துவக்கிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு மூச்சுவிடுவதில் சிரமப்படும் நோயாளிகளுக்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி சார்பில் கோவையில் மொபைல் ஆக்சிஜன் சேவையை துவங்கப்பட்டுள்ளது.

கொரானா தொற்றின், இரண்டாம் அலை மிகப் பெரிய தாக்கத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில் அதன் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில், மொபைல் ஆக்சிஜன் சர்வீஸ் துவங்கப்பட்டுள்ளது.

உக்கடம் கோட்டைமேடு பகுதியில் இருசக்கர வாகன ஆக்சிஜன் சர்வீஸ் துவங்கப்பட்டுள்ளது.

இதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் துவங்கிவைத்து, வாகனத்தை வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img