முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்து, தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகத்தின் சார்பில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 8 லட்சத்து 3 ஆயிரத்து 956 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர், தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ஜி.சுகுமார் ஆகியோர் உள்ளனர்.