மதுரை அரிமா சங்க அறக்கட்டளை சார்பில் மதுரை அவனியாபுரம் ஹர்சிதா மருத் துவமனைக்கு அனைத்து சிறுநீரக நோயாளிகளும் இலவசமாக பயன்பெறும் வகையில் ரூ.15 லட்சம் மதிப்பில் இரண்டு டயாலிசீஸ் கருவிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அரிமா சங்க நிர்வாகி ஜானகிராமன் துவக்கி வைத்தார். இது குறித்து அரிமா சங்க நிர்வாகி ராமசாமி கூறுகையில், சிறுநீரக நோயினால் ஏழை, பணக் காரர்கள் என வித்தியாசம் இன்றி அனைவரும் பாதிக் கப்பட்டு வருகின்றனர்.
எனவே இங்கே அமைக் கப்பட்டுள்ள டயாலிசீஸ் சிகிச்சை மையத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நோயாளிகள் அரிமா நிர்வாகிகளின் ஒப்புதலோடு வாழ்நாள் முழுவதும் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக சிகிச்சை பெறலாம் எனகூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஹர்சிதா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர்கள் இளங் குமரன், இளந்தளிர் உள்பட அரிமா சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.