fbpx
Homeபிற செய்திகள்மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பு முகாம்

மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பு முகாம்

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி 7வது வார்டு விவேகானந்தபுரத்தில் நடந்த மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சமுதாயக்கூடத்தில் நடந்த இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் சவுந்தர்யா விஜயகுமார் முன்னிலை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் உமாதேவி தலைமை வகித்து முகாமைத் தொடக்கி வைத்தார்.

இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்த பரிசோதனை, உயர்ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கினர்.

மேல்சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டோர் விரைவில் அரசு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று அவரது பரிந்துரையின் பேரில் அவர்களுக்கு வீடுதேடி சென்று இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

முகாமில் வார்டு கவுன்சிலர்கள் ஜனனி, வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img