fbpx
Homeபிற செய்திகள்போக்சோ வழக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் - போலீசாருக்கு ஐ.ஜி அறிவுரை

போக்சோ வழக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் – போலீசாருக்கு ஐ.ஜி அறிவுரை

பொதுமக்களிடத்திலும், பெண் களிடத்திலும், போக்ஸோ பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள் என்று நீலாம்பூர் பகுதியில் ஐ.ஜி. சுதாகர், காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

கோவை பணியிடை பயிற்சி மையம் சார்பாக, கோவை காவல் சரகத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை, திருப்பூர் மாநகரங்களை சார்ந்த அனைத்து பெண் காவல் அதிகாரிகளுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்ற வழக்குகளை கையாள்வது சம்மந்தமாக ஒரு நாள் பயிலரங்கம், கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

மேற்படி பயிலரங்கத்தை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர், துவக்கி வைத்து, கடந்த ஓராண்டில் போக்சோ வழக்குகளில் சிறப்பாக கையாண்டு, அதிகப்படியான வழக்கு களில் தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற காவலர்களுக்கும், கேடயங்களை பரிசாக வழங்கினார்.

அதேபோன்று மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான குற்ற வாளிகளை குண்டர் தடுப்புக் காவலில் வைத்ததற்காக, காவல் அதி காரிகளுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தார்.

பொதுமக்களிடத்தி லும், பெண்களிடத்திலும், போக்ஸோ பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள் என்றும் அவர் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
இப்பயிலரங்கத்தில் நீதித்துறை, மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப் பினர்கள் சிறப்புரையாற்றினர்.

பணியிடை பயிற்சி மையத்தின் பொறுப்பு அதிகாரியான கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் முத்துசாமி, மேற்பார்வையில் நடைபெற்ற இப்ப யிலரங்கத்தில், உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை 150-க்கும் மேற் பட்ட பெண் அதிகாரிகளும், கோவை சரகத்திற்குட்பட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

படிக்க வேண்டும்

spot_img