fbpx
Homeபிற செய்திகள்பொ.மல்லாபுரத்தில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி- பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

பொ.மல்லாபுரத்தில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி- பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் கொரோனா நோய் தடுப்பு குறித்தும் மற்றும் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இப்பேரணி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி சேலம் மெயின் ரோடு, வாரச் சந்தை மற்றும் பேருந்து நிலையம் வழியாக சென்று இறுதியாக பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது.

இப்பேரணியினை பேரூராட்சி தலைவர் பு.சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் பேரூராட்சி செயல் அலுவலர் கோ.நாகராஜன், துணைத் தலைவர் ஸ்ரீதா மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்பேரணியின் போது பொதுமக்களுக்கு முகக்கவசம் விநியோம் செய்தும், முகக்கவசம் அணிவதின் அவசியம் குறித்தும், நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img