கூடலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் அன்னை கரங்கள் நல சங்கம் சார்பில் மதிய உணவு மற்றும் உடைகளை முன்னாள் பேரூராட்சி தலைவர் அ.அறிவரசு வழங்கினார்.
உடன் உதிரம் அறக்கட்டளை பொறுப்பு அலுவலர் அருள் பிரகாஷ், கோபி நாத், அண்ணாதுரை, சுரேஷ், பிரகாஷ், கலையரசன், மோகன், கஸ்பா துரை, கார்த்தி மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.