நீலகிரி மாவட்டம், இளித்தொரை சமுதாய கூடத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் எடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் இதர சங்கங்கள் சார்பில் 341 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு பயிர்கடன்களை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஷ்வேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் உட்பட பலர் உள்ளனர்.



