நீலகிரி மாவட்டம், பாலக்கொலா ஊராட்சிக்குட்பட்ட மஞ்சூர் மெயின் சாலை முதல் மெரிலேண்ட் வரை மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.24.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சிமெண்ட் சாலை பணியினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், செயற்பொறியாளர் சுஜாதா, பாலக்கொலா ஊராட்சி தலைவர் கலையரசி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.



