fbpx
Homeபிற செய்திகள்தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை: கோவை மேயர் துவக்கிவைத்தார்

தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை: கோவை மேயர் துவக்கிவைத்தார்

கோவை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் முகாமை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி சார்பில் 100 வார் டுகளில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உடல் பரிசோதனையை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக், 83வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார் ஆகி யோர் உடனிருந்தனர்

படிக்க வேண்டும்

spot_img