திருப்பூர் மாவட்ட வியா பாரிகள் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா பி.என்.ரோடு போயம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் அப்துல் காதர் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறைநிய மன அலுவலர் விஜயலலிதாம் பிகை, உணவு பாதுகாப்பு ஆய்வாளர் தங்கவேல் மற்றும் மீன் வியாபாரிகள் நலச்சங்க உறுப்பினர்கள் சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
உணவு பாதுகாப்பு துறை சார்பில் மீன் வியாபாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங் கப்பட்டன.
கடைகளில் மீன்களை பொரிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்தும் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.



