தர்மபுரி நகராட்சியின் முதல் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமி நாட்டன்மாது தலைமையிலும், நகர மன்ற துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆணையாளர் சித்ரா சுகுமார் மற்றும் நகராட்சி பொறியாளர்
ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு நகர மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை விரைவில் பரிசீலனை செய்வதாக கூறினர்.