தருமபுரி மாவட்டம், கடகத்தூர் கூட்டுரோடு லக்ஷ்மி நாராயண திருமண மண்டபத்தில் நடைபெற்ற 68-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு விற்பனையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வைத்திநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.



