fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுகலை மாணவரின் ஆய்வறிக்கை அகில இந்திய அளவில் முதலிடம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுகலை மாணவரின் ஆய்வறிக்கை அகில இந்திய அளவில் முதலிடம்

தேசிய விவசாய விரி வாக்க மேலாண்மை நிறுவனத்தின் 34வது நிறுவன நாள் நிகழ்ச்சி இணையவழியில் நடைபற்றது.
வேளாண் விரி வாக்க முதுகலை மற்றும் முனைவர் பிரிவில் இந்திய மாணவர்கள் மேற்கொண்ட மிகச் சிறந்த ஆராய்ச்சிப் பணிகளை கண்டறிந்து மேலும் அவர்களை ஊக் கப்படுத்துவதற்காக தேசிய அளவில் சிறந்த வேளாண் விரிவாக்க ஆய்வறிக்கை விருதை தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனம் வழங்கி உள்ளது.

வேளாண் விரிவாக்கம் மற்றும் தகவல் தொடர்புத் துறை முதுகலை மாணவர் எஸ்.அரவிந்த்குமார் (2018-&2020), தமிழ் நாடு வேளாண் பல்கலைக் கழகம் கிள்ளியூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வேளாண் விரிவாக்க பேராசிரியர் முனைவர் ச.கார்த்திகேயனின் வழிகாட்டுதலின் கீழ் “தமிழ் நாட்டில் விவசாயிகள் மற்றும் வேளாண் விரிவாக்க அதிகாரிகளிடையே உழவன் செயலியின் பயன்பாட்டின் பயன்பாட்டு நடத்தை மதிப்பீடு” என்ற தலைப்பில ஆய் வறிக்கை சமர்ப்பித்து இருந்தார்.

அவருக்கு முது கலைப் பிரிவின்கீழ் சிறந்த வேளாண் விரிவாக்க ஆய்வறிக்கை விருது (முதல்பரிசு) கிடைத்துள்ளது.

மாணவர் எஸ்.அரவிந்த்குமாருக்கு தேசிய விவசாய விரி வாக்க மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் முனைவர் பி.சந்திரசேகரா முன்னிலையில் விருது, சான்றிதழ் மற்றும் ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை மத்திய வேளாண் மற்றும் உழவர் நலஅமைச்சகம் வேளாண் கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் வழங் கினார்.

படிக்க வேண்டும்

spot_img