இன்றைக்கு நாட்டில் இணைய பயன்பாடு அதிகரித்து விட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று பரவல், ஊரடங்கால் இணைய பயன்பாடு மேலும் பல மடங்கு அதிகரித்து விட்டது. அதே வேகத்தில் இணையவழி மோசடிகளும் அதிகரித்து விட்டன.
இணைய குற்றவாளிகள் வங்கி அல்லது மொபைல் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது தொலைப்பேசி அழைப்புக்கள் மூலம் தொடர்பு கொண்டு தங்களது KYC பதிவு முழுமையாக இல்லை அல்லது காலாவதியாகிவிட்டது எனவும் அதைப் புதுப்பிக்காவிட்டால் உங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வங்கி அல்லது மொபைல் சேவை நிறுத்தப்படும் என கூறுவர். அதனை நிவர்த்தி செய்ய தொலைநிலை அணுகல் செயலிகளை பதிவிறக்கம் செய்ய சொல்வர்.
வாடிக்கையாளர்கள் இந்த தொலைநிலை அணுகல் செயலிகளை பதிவிறக்கம் செய்தவுடன் இச்செயலிகள் மூலம் இணைய குற்றவாளிகள் உங்களது மொபைல் மற்றும் அதில் உள்ள வங்கி மற்றும் தனிப்பட்ட தரவுகளை திருடி
விடுகிறார்கள். மறுகணமே உங்கள் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் மாயமாகி விடுகிறது.
இவை மட்டுமல்ல இதுபோன்ற பல வழிகளில் இணைய குற்றவாளிகள் தந்திரமாக பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பலர் ஏமாந்து போய் பணத்தை இழக்கின்றனர்.
இது போன்ற இணைய குற்றங்களில் சிக்காமல் நம்மை நாமே காப்பாற்ற எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் ஏமாற்றுவார்கள், அதில் இருந்து நாம் தப்புவது எப்படி? என்பதை கோவை சைபர் கிரைம் போலீசார் இங்கே பட்டியலிட்டுள்ளனர்.
- ஊரடங்கை பயன்படுத்தி ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி உங்களிடம் முன் பணம் செலுத்தவேண்டும் என்று யாராவது உங்களை தொடர்பு கொண்டால் உடனே அந்த அழைப்பைத் துண்டித்துவிடுங்கள்.
- பெண்கள் தங்களது புகைப்படத்தை FACEBOOK, INSTAGRAM, WHATSAPP போன்ற சமூக வலைதளத்தில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.
- ஏதேனும் அடையாளம் தெரியாத நபர் உங்களை தொடர்புகொண்டு ATM CARD NUMBER, OTP NUMBER, BANK ACCONT NUMBER, PAN CARD NUMBER இது போன்று பணபரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் ஏதேனும் கேட்டால் உடனே அந்த அழைப்பை துண்டித்துவிடுங்கள்.
- ஏதேனும் நிறுவனம் என்ற பெயரில் கீபிகிஜிஷிகிறிறி மூலம் வர்த்தகர் என்று அறிமுகமாகி உங்களை தொடர்புகொண்டு உங்கள் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி மர்ம நபர்கள் உங்களை தவறாக பயன்படுத்தக்கூடும்.
- உங்களுடைய கைபேசிக்கு வரும் தவறான குறுஞ்செய்திகளை நம்பி, LINK யை தொடுவதை முற்றிலும் தவிர்க்கவும்.
- வங்கிக்கடன் தருவதாக, வங்கி கிளை மேலாளர் போல் தொலைபேசி அல்லது வேறு ஏதேனும் சமூக வலைதளத்தின் மூலம் தொடர்புகொண்டு, உங்களின் வங்கி கணக்கு பற்றிய விபரங்களை கேட்டால் தெரிவித்தல் கூடாது.
- பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக பணம் கேட்டு மிரட்டினால் அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தகவலை தெரிவிக்கவும்.
- தங்களது கைபேசி தொலைந்துவிட்டால் உடனே கைபேசி எண்ணை BLOCK செய்யவும் இல்லையெனில் உங்கள் எண் தவறாக பயன்படுத்தக்கூடும்.
- கொரோனாவை பயன்படுத்தி ஆன்லைனில் OXYGEN CYLINDER குறைந்த விலையில் தருவதாக கூறி முன் பணம் செலுத்தவேண்டும் என்று கூறினால் பணம் செலுத்தவேண்டாம்.
- இதயத்துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை கண்டறியும் கருவி என எந்த APPயும் பதிவிறக்கம் செய்து உங்களின் கைரேகையை பதிவிடுவதால் உங்களை பற்றிய அனைத்து தகவலும் திருடப்படும்.
- உங்களது உறவினர் மற்றும் நண்பர்கள் WHATSAPP AND FACEBOOK MESSAGE மூலம் உங்களை தொடர்புகொண்டு அவசரத்தேவை என்று கூறி பணம் கேட்டால் உடனே போன் மூலம் அவரை தொடர்புகொண்டு உறுதி செய்த பின் பணம் செலுத்தவும்.
- ATM CARD மூலம் PETROL BUNK, SHOPPING MALL போன்ற இடங்களில் ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்யும்போது மிகவும் கவனமுடன் செயல்படவும்.
- இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் வர்த்தக தள்ளுபடி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.
- OLX ல் பழைய கார் மற்றும் BIKE தள்ளுபடி விலையில் உள்ளது என்று ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம்.
- உங்கள் நிலத்தில் மொபைல் டவர் அமைக்க அல்லது காற்றாலை டவர் அமைக்க உள்ளோம். உங்களுக்கு மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாய் வாடகை கிடைக்கும் என்றும், அதற்கு முன் பணம் பல லட்சங்கள் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறினால் நம்ப வேண்டாம்.
- பொது இடத்தில் உங்களது வங்கி பற்றிய தகவல் மற்றும் ரகசிய எண்களை பகிர்ந்து கொள்ளுதல் கூடாது.
- ATMல் பணம் எடுக்கும் போது யாராவது உங்களுக்கு தானாக வந்து உதவி செய்வதாக கூறினால் மறுத்துவிடுங்கள். உதவி செய்வது போல் நடித்து உங்களுக்கு தெரியாமல் PIN NUMBER மற்றும்ATM NUMBER யை தெரிந்து கொண்டு உங்கள் வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் எடுத்துவிடுவார்கள்.
- அறிமுகம் இல்லாத நபரிடம் இணையத்தில் வீடியோ CALL பேசுவதை தவிர்க்கவும். ஏனெனில் வீடியோ CALL பேசும் போது SCREENSHOT, SCREEN RECORDER எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்ட நேரிடும்.
- உங்கள் குழந்தைகள் பணம் செலுத்தி ஆன்லைனில் GAME விளையாடுகிறார்களா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தி GAME விளையாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- பயன்படுத்தப்படாத பழைய வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும். ஏனெனில் உங்கள் வங்கி கணக்கை வேறு யாரேனும் தவறாக பயன்படுத்தக்கூடும்.
மேற்கண்ட தவறுகள் நடப்பது தெரியவரும் பட்சத்தில் புகார் அளிக்க வேண்டிய இணையதள முகவரி www.cybercrime.gov.in
மேலும் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கிரைம் காவல்நிலையம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயதேவி, காவல் ஆய்வாளர் சி.சங்கு ஆகியோரிடமும் புகார் அளிக்கலாம். 94981 86368, 94981 72237 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.