மத்தியில் தொடர்ச்சியாக ஆண்ட அரசுகள் இயற்றிய பல்வேறு சட்டங்களின் காரணமாக நுகர்வோரின் உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நின்றே போய்விட்டன. வாங்கப்படும் எந்தப் பொருளின் மதிப்பும் நூறு சதவீதம் நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதி செய்ததே இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் முக்கிய அம்சமாகும்.
தங்க ஆபரணங்கள்/பொருட்கள் தங்கத்தின் தூய்மையை உறுதி செய்யும் ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயம் பெற வேண்டும் என அரசு கடந்த ஆண்டு எடுத்த முடிவை இதன் பின்னணியில் பார்க்க வேண்டும். இச்சட்டம் ஜூன் 16, 2021 முதல் அமலுக்கு வந்துள்ளது.
தங்கத்தின் தூய்மையை உறுதி செய்யும் ஹால்மார்க் முத்திரையை தங்க ஆபரணங்கள்/பொருட்கள் கட்டாயம் பெற வேண்டும் என்ற முடிவினால் குறைந்த விலையில் விற்கிறோம் என்ற போர்வையில் தரமற்ற தங்கத்தை நுகர்வோரின் தலையில் கட்டும் சில ஏமாற்று வியாபாரிகளின் செயல்கள் முடிவுக்கு வரும்.
தங்கம் வாங்குவோரை சட்டரீதியாக பாதுகாப்பது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசின் தலையாய கடமை ஆகும். ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என ஆக்குவதன் மூலம் தங்க ஆபர ணங்கள்/ பொருட்கள் வாங்குவோரின் உரிமைகளை அரசு காக்கிறது; ஒருவேளை வியாபாரிகள் மக்களை ஏமாற்ற நினைத்தால் சட்டபூர்வமான கட்டமைப்பினால் அவர்களுக்கு தண்டனையும் கிடைக்கும்.
உண்மை நிலையைப் பார்த்தால் ஆபரண உற்பத்தியாளர்கள் தங்கத்துடன் துத்தநாகம், வெள்ளி முதலான உலோகங்களைக் கலந்து ஆபரணங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்கின்றனர்.
ஏனெனில், தங்கம் பலவீனமான, எளிதில் உடையக்கூடிய ஒரு உலோகமாகும். தங்கத்தில் இருக்கும் பிற வகை உலோகங்களின் அளவைப் பொறுத்து இந்தியத் தர நிர்ணயக் கழகமானது தங்கத்தை 18 காரட், 22 காரட் என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளது.
தங்கம் எவ்வளவு தூய்மையானது என்பதை இதன் மூலம் எளிதில் சொல்லிவிடலாம். 22 காரட் ஆபரணத்தில் தூய தங்கம் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, ஆபரணத் தின் ஒரு கிராமில் குறைந்தது 91.6% தங்கம் கலந்திருக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது.
18 காரட் நகையில் குறைந்தது தங்கம் 75%, 14 காரட் ஆபரணத்தில் குறைந்தது 58.5% தங்கம் கட்டாயமாக இருக்க வேண்டும் என இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கத்தின் தர நிர்ணய அளவுகள் முன்பே வரையறுக்கப்பட்டிருந்தன என்ற போதிலும் அவை பரவலாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, BSI வகுத்துள்ள நெறிமுறைகள் தவறாமல் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவே ஹால்மார்க் முத்திரை கட்டாயம் தேவை என்பதை வலியுறுத்தும் இச்சட்டத்தை அரசு இயற்றியுள்ளது.
தங்கத்தின் தூய்மையை சோதித்து அதற்கேற்ப ஹால்மார்க் சான்றிதழ்களைத் தர அரசு பல்வேறு தனியார் ஏஜென்சிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
ஹால்மார்க் சான்றிதழ் தரப்பட் டுள்ள ஒவ்வொரு தங்கப் பொருளின் மீதும் உள்ள ஙிஷிமி ஹால்மார்க் லேபிளில் அதன் தூய்மை சதவீதம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மேலும், ஆபரணத்தின் பெயர் மற்றும் ஹால்மார்க் சான்றிதழ் வழங்கிய ஏஜென்சியின் பெயர் ஆகியவையும் அதில் கட்டாயமாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த லேபிள் இருப்பதால் தான் ஏதாவது மோசடி நிகழும் போது சட்டத்தை அமல்படுத்தும் ஏஜென்சிகளால் சுலபமாகத் திருடர்களைக் கண்டுபிடித்துவிட முடியும்.
வருங்காலத்தில் BSI ஹால்மார்க் முத்திரையுடன் கூட தங்க ஆபரணம்/பொருட்களின் தனித்துவம் மிக்க ஒரு 6-இலக்க அடையாள எண்ணும் (HUID) இடம் பெற்றிருக்கும்.
ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நுகர்வோருக்கு மூன்று மட்டங்களில் ஆதாயம் கிடைக்கும். முதலாவதும் முக்கியமானதுமான ஆதாயம் என்னவெனில் தாம் வாங்கும் தங்கத்தின் தூய்மை பற்றி நுகர்வோர் சிறிதும் கவலைப்படத் தேவையில்லை.
இரண்டாவது ஆதாயம் என்னவெனில் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும் தங்க நகைகள்/ஆபரணங்களை மீண்டும் விற்கும் போது (அ) இதை எக்ஸ்சேஞ்ச் செய்து வேறு தங்கம் வாங்கும் போது நுகர்வோருக்கு தமது பொருட்களுக்கான அதிக மதிப்பு நிச்சயம் கிடைக்கும்.
தரச் சான்றிதழ் தரப்பட்டுள்ள தால் தரம் குறைவாக உள்ளது என்று கூறி இந்த நகைகள்/பொருட்களின் விலையை யாராலும் குறைத்து விட முடியாது. தங்க நகைகள்/ பொருட்களை வாங்கும் நுகர்வோ ருக்குக் கிடைக்கும் சட்டரீதியான பாதுகாப்பு தான் மூன்றாவது ஆதாயமாகும்.
மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என்ற முறையில் சில தங்க வியாபாரிகளிடம் தரக் குறைவான தங்க நகை/பொருள் வாங்கும் போது நுகர்வோர் எப்படி ஏமாற்றப்படுகின்றனர் என்பது பற்றிப் பக்கம் பக்கமாக என்னால் கூற முடியும். தாம் தரும் பணத்திற்கான 100% மதிப்பு எங்களது
வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் பொருட்டு ஙிஷிமி ஹால்மார்க் முத்திரை உள்ள தங்கத்தை மட்டுமே கடந்த 21 ஆண்டுகளாக நாங்கள் விற்பனை செய்துள்ளோம்.
இப்படி நியாயமான முறையில் வர்த்தகம் செய்து வந்ததால் தான் கடந்த காலத்தில் எமது தொழில் பன்மடங்கு பெருகியது. தற்போது 30% ஆபரண உற்பத்தியாளர்கள் மட்டுமே ஙிஷிமி ஹால்மார்க் முத்திரை உள்ள தங்க நகைகள்/பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். போலியான ஹால்மார்க் சான்றிதழ் தயாரிக்கும் சட்டவிரோதமான ஏஜென்சிகளிடமிருந்து பெற்ற சான்றிதழ்களை வைத்து போலியான தங்க நகை/பொருட்களை வாடிக்கை யாளர்களிடம் விற்பனை செய்யும் நிகழ்வுகளும் நடத்து கொண்டு தான் இருக்கின்றன.
இம்மாதிரி சட்ட விரோதமான நிகழ்வுகளைத் தடுக்க ஹால்மார்க் சான்றிதழ் தரும் அதிகாரம் பெற்றுள்ள அனைத்து ஏஜென்சிகளிலும் அவ்வப்போது அரசு சோதனை நடத்த வேண்டும்.
தங்கத்தின் தூய்மையைச் சோதித்து அதற்கேற்ற ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய சான்றிதழ்களை அளிக்கப் போதுமான ஏஜென்சிகள் இல்லை என்ற புகார்கள் சில இடங்களில் வந்தவண்ணம் உள்ளன. இது சரியான நிலைமை அல்ல.
சொல்லப்போனால், நாடெங்கிலும் 965 ஹால்மார்க் மையங்களை அரசு நிறுவியுள்ளது; பெரும்பாலான மையங்களில் முழுமையான அளவில் ஆட்கள் பணியிலமர்த்தப்படவில்லை.
இம்மையங்களின் மூலம் அதிகபட்ச அளவிலான சேவை கிடைக்கும்போது ஹால்மார்க் சான்றிதழ்களை பெறுவது தொடர்பாக எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது. ஹால்மார்க் முத்திரை என்ற நிகழ்முறை அமலாகும்போது தங்கத்தை சட்டவிரோதமான வகையில் நாட்டுக்குள் கடத்தி வரும் பரவலான ஒரு செயல் அறவே நின்றுபோய் விடும்.
e-நிர்வாகம் மற்றும் பிறவகை கண்டறியும் கட்டமைப்புகளை முழுமையாக அரசு செயல்படுத்தினால் எல்லோரும் ஹால்மார்க் முத்திரை நிகழ்முறையைப் பின்பற்றுவது உறுதி செய்யப்படும்; இதனால் சட்டவிரோதமான முறையில் நிகழும் தங்க வர்த்தகமும் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
தனித்துவமான 6-இலக்க அடையாள எண் (HUID) என்ற நிகழ்முறை அமலாக்கப்படும் போது தங்க ஆபரணங்கள்/பொருட்களில் ஹால்மார்க் முத்திரையை எல்லோரும் கட்டாயம் பெற்றாக வேண்டும் என்பதும் உறுதிசெய்யப்படும்.
ஹால்மார்க் முத்திரை பெறும் நிகழ் முறையானது தங்க ஆபரண வர்த்தகம் செய்வோருக்குப் பெரும் ஆதாயம் தரும். தூய்மையான தங்கத்தை மட்டும் விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் முழு நம்பிக்கையை வர்த்தகர்கள் பெறு வதுடன் தமது தொழிலையும் பெருமளவில் மேம்படுத்தலாம்.
எனவே, தங்க நகைகள்/பொருட்களுக்கு ஹால் மார்க் முத்திரை பெற்றாக வேண்டும் என்பதைக் கட்டாயமானதாக ஆக்கும் அரசின் முடிவை ஆபரணத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் உறுதியான முறையில் ஆதரித்தாக வேண்டும்.
(கட்டுரையாளர்: எம்.பி.அகமது, சேர்மன், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்)