கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் தீபக் தாமோர், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வள அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுயம் ஞானதேவ்ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.



