கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி தலைமையில் மாவட்ட கலெக்டர் சமீரன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



