கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, இராஜபாளையம் தொகுதி, செட்டியார்பட்டி பேரூராட்சியில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு, எஸ்.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், கிளை செயலாளர்கள் தொந்தியப்பன், தங்கமணி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.