சவீதா சட்டப் பள்ளி, ஷிமிவிகிஜிஷி-ல் ஏற்பாடு செ ய்யப்பட்ட கல்லூரி களுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் கலாச்சார விழாவான, யிus லிuபீவீs கிக்ஷீtமீனீ இன் முதல் நிகழ்ச்சியை, தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி முறையாகத் தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:மாநிலம் முழுவதும் அடிமட்ட அளவில் விளையாட்டு மற்றும் கலாச்சார திறமைகளை மேம்படுத்துவதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருவது பாராட்டுக்குரியது.
இந்திய சட்டக் கல்லூரி களின் வரலாற்றில், சட்டக் கல்வியில் தமிழகத்தின் பங்களிப்பும் அதிகம். தமி ழகத்தில் முதல் சட்டப் பல்கலைக்கழகத்தை நிறுவியதில் கலைஞர் கரு ணாநிதிக்கு பங்கு உண்டு. சட்டம் இயற்றுவது, சட்டத்தை எதிர்ப்பது, ஒவ்வொருவருக்கும் நீதி வழங்குவது போன்ற பொ றுப்புகளும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு உண்டு.
மாணவர்களின் முழுமையான வளர்ச் சிக்காக கல்வி மற்றும் பாடத்திட்ட செயல்பாடுக ளோடு, இணை பாடத் திட்டத்திற்கும் சம முக் கியத்துவம் அளித்து மாணவர் நலன் மீது அக்கறை கொண்டுள்ளது. சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் (ஷிமிவிகிஜிஷி) வேந்தர் டாக்டர் என்.எம்.வீரைய்யனின் முயற்சி பா ராட்டுக்குரியது.
இந்த நிகழ்வுகள் சமூக தொடர்புகளை மேம்படுத் துவதோடு மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் தொடர்பு திறன்களை மேம் படுத்த உதவுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் ஷிமிவிகிஜிஷி -ன் துணைவேந்தர் டாக்டர் சிவாஜி, கல்வியியல் இயக்குநர் டாக்டர் தீபக் நல்லசாமி, சவீதா சட் டப் பள்ளி முதல்வர் பேராசிரியர் (டாக்டர்) ஆஷா சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூ ரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சி கள் நடத்தப் படுகின்றன.



