ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ், நிறுவனம் 2021-ம் நிதி ஆண்டில் அனைத்து பங்கேற்புப் பாலிசிதாரர்களுக்கும் 867 கோடி ரூபாயை வருடாந்திர ஊக்கத் தொகையாக (போனஸ்) அறிவித்துள்ளது.
இப்போது அறிவிக்கப்பட்ட இந்த போனஸ் தான் நிறுவனம் இதுவரை அறிவித்த போனஸ்களிலேயே மிக அதிகமாகும். அத்துடன் இது கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட போனஸை விட 10 சதவீதம் அதிகமாகும்.
மார்ச் 31, 2021 வரை நடைமுறையில் உள்ள அனைத்து பாலிசிகளும் இந்த போனஸைப் பெற தகுதியுடையவை ஆகும். மேலும் அவை பாலிசிதாரர்களின் சலுகைகளில் சேர்க்கப்படும்.
மொத்தம் 9 லட்சத்து 80 ஆயிரம் பாலிசிதாரர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இது அவர்களின் நீண்டகால நிதி இலக்குகளை அடைய உதவும்.
ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என்.எஸ் கண்ணன் கூறுகையில், “2021-ம் நிதி ஆண்டுக்கான வருடாந்திர போனஸ் நிறுவனத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவாக உள்ளது.
இதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.