fbpx
Homeபிற செய்திகள்‘ஐம்பதாயிரம் விவசாய மின் இணைப்பு’ திட்டத்தில் 2854 விவசாய இலவச மின் இணைப்புக்கு ஒப்புதல்

‘ஐம்பதாயிரம் விவசாய மின் இணைப்பு’ திட்டத்தில் 2854 விவசாய இலவச மின் இணைப்புக்கு ஒப்புதல்

ஈரோடு மாவட்டத்தில், ஒரு இலட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், 3292 எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
ஐம்பதாயிரம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், 2854 விவசாய மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எரிசக்தித் துறையின் 2021-&22-ம் ஆண்டு மானியக்கோரிக்கையில் மாநிலத் தின் விவசாய உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டிலேலே முதன் முறையாக இது வரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு 23.09.2021 அன்று முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் ரூ.3025/- கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக எரிசக்தித்துறையின் 2022-&23-ம் ஆண்டு மானியக்கோரிக்கையில் தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயி களின் நலனை மேம்படுத்தும் நோக்குடனும் நடப்பு நிதியாண்டில் 50,000 எண்ணிக்கையில் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அரசின் விவசாய மின் இணைப்புத்திட்டத்தினை பொறுத்தவரை சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பகிர்மான வட்டங்கள்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 மின்பகிர்மான வட்டங்கள் உள்ளன.
அந்த வகையில்,ஈரோடு மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த ஈரோடு மின் பகிர்மான வட்டம் நகரியம், தெற்கு, பெருந்துறை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண்\கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் 1187 எண்ணிக்கையிலும், கோபி செட்டிபாளையம் மின்பகிர் மான வட்டத்தில் 2105 எண்ணிக்கையிலும் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் 1143 எண்ணிக்கையும், கோபி செட்டிபாளையம் மின்பகிர்மான வட்டத்தில் 1711 எண்ணிக்கையும் விவசாய மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

“கரும்பு, வாழை பயிரிடுவேன்”

ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டம், பெருந்தலையூர் பகுதியைச்சேர்ந்த நா.செந்தில்குமார், த/பெ.நாராயனண் தெரிவித்தத £வது:,
(மின் இணைப்பு எண்: 019-005-1460, நாள்:10.11.2022) 1.33 ஏக்கர் அளவில் விவசாய நிலம் உள்ளது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்செய்து வருகிறேன்.

ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தற்போது நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளேன். வருமானத்தில் பெரும் அளவு மின்சாரத்திற்கு செலவிட வேண்டிய நிலை இருந்தது. விவசாய மின் இணைப்பு கோரி 2004-ம் ஆண்டு முன் வைப்புத்தொகையாக ரூ.500/- செலுத்தி விண்ணப்பித்திருந்தேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியதோடு தற்போது கூடுதலாக ஐம்பதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இத்திட்டம் அறிவித்த, சில நாட்களுக்குள், எனக்கு 7.5 HP அளவில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. விவசாய நிலத்தில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட உள்ளேன். விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிட ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியதோடு தற்போது கூடுதலாக ஐம்பதாயிரம் மின் இணைப்புகள் வழங்கிய முதல்வருக்கு குடும்பத்தின் சார்பாக என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்றார்.

“கட்டணமில்லாமல்
10 எச்.பி. மின் இணைப்பு”

ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டம், சலங்கபாளையம் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி, க/பெ. கா.பாலசுப்பிரமணி, த/பெ.காமாட்சிசுந்தரம் தெரிவித்ததாவது:
(மின் இணைப்பு எண்: 018 007 529, நாள்:10.11.2022) எனக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இரண்டு மகன்கள் உள்ளனர். பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர். எனது நிலம் வானம் பார்த்த பூமியாக உள்ளது. தற்போது நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளேன். ஆழ்துளை கிணற்றுக்கு விவசாய மின் இணைப்பு கோரி 2012-ம் ஆண்டு முன் வைப்புத்தொகையாக ரூ.500 செலுத்தி விண்ணப்பித்திருந்தேன்.

முதல்வர் பதவியேற்றவுடன், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியதோடு தற்போது கூடுதலாக ஐம்பதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் அடிப்படையில் இத்திட்டம் அறிவித்த, 15 நாட்களுக்குள், எனக்கு 10 HP அளவில் மின் இணைப்பு கட்டணமில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

நான் எனது விவசாய நிலத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட உள்ளேன். இதன் மூலமாக எனது வருவாயினை பெருக்கிக் கொள்ள முடியும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இத்தகைய திட்டத்தினை அறிவித்து (11.11.2022) அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வரிடம் இருந்து உத்தரவு ஆணையினை பெற்றுக்கொண்டேன்.

இத்தகைய சீரிய திட்டத்தினை அறிவித்து, எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியினை ஏற்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஈரோடு மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img