ஊரடங்கை தளர்த்தி பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கலாமா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல் வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அதிகளவு தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது.
கொரோனா தொற்று அதிகமுள்ள கோவை உள்பட 11 மாவட்டங்களில் குறைந்த தளர்வுகளுக்கே அனுமதி தரப்பட்டுள்ளது.
நேற்று முதல் இந்த புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன.
டாஸ்மாக் மதுபான கடைகள் 27 மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுள்ளன. சலூன் கடைகள், அழகு நிலையங்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளன. டீ கடைகள் திறக்கப்பட்டு பார்சல் சேவை வழங்கப் படுகிறது.
பூங்காக்கள் திறக்கப்பட்டு காலை மட்டும் நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறது.
இனிமேல் பள்ளிகள் திறக்க வேண்டியது மற்றும் பஸ் உள்ளிட்ட பொது பொது போக்குவரத்து சேவைகளை அனுமதிக்க வேண்டியது, மாவட்டங்களிலேயே இ பதிவு நடை முறையை நீக்க வேண்டியது ஆகியவைதான் பாக்கி.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
இதில் 2 புதிய கலெக்டர்கள் உள்பட 16 மாவட்ட கலெக்டர்கள் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனையில் பங்கேற்றனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்பட புதிதாக நியமிக் கப்பட்ட 24 மாவட்ட கலெக்டர்களில் 22 பேர் இந்த ஆலோசனை கூட்டத் தில் நேரில் பங்கேற்றனர்.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டதன் காரணமாக, மக்கள் அதிக அளவுக்கு வெளியே வருவதால் நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை, சரியாக கடைபிடிக்க வேண்டும், விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் தளர்வுகள் ரத்து செய்யப் படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எனவே மக்கள் கட்டுப்பாடு களை சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க கலெக்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொது மக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவையைத் தொடங்குவது குறித்து கோரிக்கைகள் விடுக்கப் பட்டு வருகின்றன.
இந்தக் கோரிக்கைகள் உள்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கொரோனா நோய்த்தொற்று நிலவரம், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் ஆலோசித்துள்ளார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, பொதுப் போக்குவ ரத்து சேவை போன்ற விஷயங்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இன்றைய கூட்டத்தில் பெரும்பாலான கலெக்டர்கள், ஒப்புக் கொண்டால், பஸ் போக்கு வரத்து அடுத்தவாரமே துவங்கபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்ப டுகிறது.
அதேநேரம், பள்ளி திறப்பு இப்போதைக்கு இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இன்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.