கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அவிநாசி சாலை பன்மால் அருகேயுள்ள மழைநீர் வடிகாலை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயிலுள்ள செடி, கொடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணியை உடனடியாக செய்ய வேண்டுமென பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையர் முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், ஜெரால்டு சத்ய புனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



