Homeபிற செய்திகள்நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகிலுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாட்டின் திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நீதியரசர் ஜோதிமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, நகர்நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img