நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பஞ்சாயத்துக் காலனி பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ், உதவி செயற் பொறியாளர் சுப்பிரமணி, செயல் அலுவலர் நாகராஜ் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.



