நீலகிரி மாவட்டம் உதகை புதுமந்து சாலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
உடன் மாவட்ட கலெக்டர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உட்பட பலர் உள்ளனர்.



