தருமபுரி மாவட்ட தொப்பூர் கணவாய் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து போக்குவரத்து ஆணையர்/ சாலை பாதுகாப்பு ஆணையர் நடராஜன், கலெக்டர் திவ்யதர்ஷினி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் குலோத்துங்கன், போக்குவரத்து துறை சேலம் சரக துணை ஆணையர் பிரபாகரன், தருமபுரி வட்டார அலுவலர் தாமோதரன், கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை தனசேகரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.



