கோவை சி.ஐ.டி. கல் லூரி முதல்வர் பொறுப்பு ராஜேசுவரி, ஒருங் கிணைப்பாளர் டாக்டர் இளங்கோ ஆகி யோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப் போது அவர்கள் கூறிய போது:
தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2021&22ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர முதலாமாண்டு பி.இ./பி. டெக். பட்டப் படிப்புகளுக்கான விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த கல்வியாண்டில் விண்ணப்பிப்பதற்கான பதிவு, விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, தரவரிசை மற்றும் கலந்தாய்வு ஆகியவை இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடை பெறும். ஆன்லைன் விண்ணப்பம் 6-6-2021 தொடங்கி 5-9-2021 மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட கல்லூரிகளுக்கு நடைபெறும்.
அரசினர் தொழில் நுட்ப கல்லூரி, கோயம் புத்தூர்-641 013
அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் – 636 011
அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி – 630 004
தந்தை பெரியார் அரசினர் கல்லூரி, பர்கூர் – 635 104
பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 004
கோவை தொழில் நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 014
தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை – 625 015 ஆகிய 9 கல்லூரிகளுக்கு மாண வர்கள் சேர்க்கை நடைபெறும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார் கள்.



