யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஊழியர்களின் அயராத முயற்சிகளை அங்கீகரித்து பாராட்டுவதோடு தோழமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வை வளர்க்கும் வகையில் ஜூலை 21 முதல் ஜூலை 27 வரை “மனிதவள வாரம்” கொண்டாடி வருகிறது. இதையொட்டி வங்கியின் சேலம் பிராந்திய அலுவலகம் சார்பில் நேற்று (ஜூலை 23) ஐந்து ரோட்டில் வாக்கத்தான் நடைபெற்றது. இதில் வங்கியின் துணைப்பொது மேலாளாரும் பிராந்திய தலைவருமான P.M.செந்தில்குமார் மற்றும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



