சாதிக்க விரும்பும் தொழில் முனைவோருக் கான மாபெரும் நிகழ்ச் சியை, மிஸ்ஸன் மில்லியனர் கிளப் கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடத்தியது.

தொழில் முனைவோர், எப்படி ஒரு தொழிலை துவங்குவது, அதை எவ் வாறு வளர்ச்சி பெறச் செய்வது மற்றும் எப்படி மாபெரும் நிறுவனமாக மாற்றுவது என புரிந்து கொள்ள வழிகாட்டும் நிகழ்ச்சியாக இது திகழ்ந் தது.
தொழில் நகரமான கோவையில், எப்படியெல் லாம் தொழிலில் பலர் முன் னேற்றம் அடைந்தனர், அவர்களது அயராத உழைப்பு, செயல்திறன், வகுத்த திட்டங்கள் எல் லாவற்றையும் விளக்கினர். வெளிப்படையாக தங்களது வெற்றியை சொல்லும் நிகழ்வாக இது நடைபெற்றது.

இந்நிகழ்வில் தொழில் முனைவோர் மட்டுமின்றி, தன்னம் பிக்கை பேச்சாளர்களான சிந்தனைக் கவிஞர் கவி தாசன், பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், சுகி சிவம், சார்லஸ் காட்வின் மற்றும் சி கே குமரவேல் (நேச் சுரல்ஸ் ஸ்பா) தங்கமயில் ஜுவல்லரி நிறுவனர், அணில் சேமியா நிறுவனர் சுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக விழாவின் முக்கிய நிகழ்வாக ஞான சஞ்சீவன குருகுலத்தின் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் எழுதிய அற்புதங்கள் படைக்கும் மில்லியனர் மனநிலை என்ற தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங் களை ஸ்ரீ சசிகுமார் வெளியிட சிந்தனைக் கவிஞர் கவிதாசன் பெற் றுக்கொண்டார்.



