fbpx
Homeபிற செய்திகள்430 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

430 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவ லகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந் தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் டாக்டர்.ஷர்மிளா, உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.பிரசாந்த், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் / தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் (பொ) சங்கீதா, தாட்கோ பொது மேலாளர் மகேஸ் வரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 89 மனுக்களும், வீட்டு மனைப்பட்டா வேண்டி 168 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 5 மனுக்களும், 168 இதர மனுக்கள் என மொத்தம் 430 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலை வர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 மதிப்பில் தையல் இயந் திரங்களையும், மாற் றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12000 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.500 மதிப்பில் மடக்கு குச்சியும் என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.66,500 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img