பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப் பட்ட பள்ளத்தில் கோவை- திருச்சி சாலையில் பேருந்து ஒன்று சிக்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. கோவை மாநகரில் பாதாள சாக்கடைப் பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டன. பல இடங்களில் சாலை புனரமைக்கப் பட்ட நிலையில், இன்றும் சில முக்கிய இடங்களில் தோண்டி, மண் கொண்டு மூடப்பட்ட சாலை சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கிறது.
குறிப்பாக கோவை-திருச்சி சாலையை அதிகா ரிகள் கண்டு கொள்வதே இல்லை என்று கூறும் அளவிற்கு அந்த சாலை தற்போது படுமோசமாக உள்ளது. சிங்காநல்லூர் உழவர் சந்தையில் இருந்து ஒண்டிப்புதூர் வரை தோண்டப்பட்ட சாலை மீண்டும் செப்பனிடப்படாமல் உள்ளது. தற்போது மழை யும் பெய்துள்ளதால் சேறும் சகதியுமான சாலையில் வாகன ஓட்டிகள் திக்குமுக் காடி வருகின்றனர்.
சிலர் குடும்பத்துடன் சென்று வழுக்கி விழும் நிலையும் உள்ளது. இதனிடையே சமீபத்தில் கோவை அரசு மருத்து வமனை அருகே திருச்சி சாலை தோண்டி மூடப்பட்டது. ஆனால், முறையாக தார்சாலை அமைக்கப்படவில்லை.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில், சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் இங்கு தின மும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவ்வழியாக சவுரிபாளையம் நோக் கிச்சென்ற அரசுப் பேருந்து சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத் தில் சிக்கியது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து மீட்பு வாகனம் மூலம் அந்த பேருந்து மீட்கப்பட்டது. மழைக்காலம் தொடங்கி யுள்ள நிலையில், தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சீர்படுத்தா விட்டால், ஏற்படும் இது போன்ற விபத்துகளைத் தடுப்பது மிகவும் கடினம் என்று பொதுமக்கள் விரக்தி தெரிவித்தனர்.