கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநருமான த.மோகன் செவ்வாய்க் கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் பகுதியில் அருவாள்மூக்கு பணி, மூங்கிலடி கிராமத்தில் மேல்அனுவம்பட்டு வாய்க்கால் தூர்வாரும் பணி, சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் மீதிக்குடி வாய்க்கால் தூர்வாரும் பணி, சிதம்பரம் புதிய பேருந்து நிலையம் கட்டு மானப்பணி, சிதம்பரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக்குடிநீர் விநியோகிக்கும் முறைகள், சிதம்பரம் நகராட்சியில் அறிவு சார் மையம், முதல்வர் மருந்தகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு கட்டுமானப் பணிகள் குறித்து மாவட்டகண்காணிப்பு அலுவலர் த.மோகன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கண்காணிப்பு அலுவலர் த.மோகன் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 166 பாசன வாய்க் கால்கள், 26வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளன. சிதம்பரம் கோட்டத்தில் 158 பாசன வாய்க்கால்கள்,19 வடிகால் கள் தூர்வாரப்பட்டுள்ளன. இதன்மூ லம் காட் டுமன்னார் கோவில், சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம் வட்டங்களில் உள்ள சுமார் 1,33,522 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.சிதம்பரம் நகருக்கு வெளியே லால்புரத்தில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையப் பணி 37 சதம் நிறைவுபெற்றுள்ளது.
சிதம்பரம் நகராட்சி,அண்ணா மலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சேர்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்குள்பட்ட 36 குடியிருப்புகளுக்கு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 1250 படுக்கை வசதிகளுடனும், தினமும் 1,000 புறநோயாளிகள் வந்து செல்லும் வகையிலும், சராசரியாக 750 உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த ஆய்வுக் கூடம், 50 படுக்கைகள் கொண்ட அதி தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.மேலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது, சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷண்குமார், பயிற்சி ஆட்சியர் மாலதி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு அதிகாரி சி.திருப்பதி,பொதுப் பணித் துறை செயற்பொறியா ளர் (கொள்ளிடம் வடிநிலக் கோட்டம்) காந்த ரூபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி உள்பட பலர் உடனிருந்தனர்.