பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி நிர்வாகம் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பி.ஏ பொருளியல் 2ம்
ஆண்டு படிக்கும் மாணவி அஸ்விதா தன்யா ஜூன் 7 மற்றும் 8ம் தேதிகளில் கோவையில் நடந்த 1வது தமிழ்நாடு நான் மெடலிஸ்ட் மாநில தடகள சாம்பியன்ஷிப் 2025ல் கலந்து கொண்டார்.
அவர் 100 மீட்டர் ஹர்டில்ஸ் ஓட்டத்தில் முதல் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் பரிசை வென்றுள்ளார். இதற்கு பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி நிர்வாகம் கல்வி நிறுவனத்திற்கு அஸ்விதா பெருமை சேர்த்துள்ளார்.
இந்த இரட்டை வெற்றி அவரது தொடர் முயற்சியின் உற்சாகத்தைக் காட்டுகிறது எனத் தெரிவித்தனர்.