fbpx
Homeபிற செய்திகள்கிகானி குளோபல் அகாடமி எல்.எல்.பி உடன் ஒப்பந்தம்

கிகானி குளோபல் அகாடமி எல்.எல்.பி உடன் ஒப்பந்தம்

பச்சாபாளையத்தில் உள்ள கிகானி குளோபல் அகாடமி, பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றலை வழங் கும் நோக்கத்தில், மெட்டாசேஜ் அலையன்ஸ் கன்சல்டிங் எக்ஸ்பர்ட் எல்.எல்.பி உடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு உறுதிப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பள்ளியில் அதிநவீன இனோவேஷன் லேப் உருவாக்கப்படும்.


மாணவர்கள் நேரடி அனுபவம் மூலம் புதிய தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுகிறது. மேலும், லைஃப் டைம் மெம்பர்ஷிப் சான்றிதழ் மெட் டாசேஜ் அலையன்ஸ் நிறுவனத்தால் பள்ளிக்கு வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில், கிகானி குளோபல் அகாடமியின் தாளாளர் துஷார் ஆர். கிகானி கூறுகையில், “கிகானியில், புத்தக அறிவோடு உலகத்தில் வாழக்கூடிய திறன்களையும் மாணவர்களுக்கு தருவதே எங்கள் நோக்கம்.

மெட்டாசேஜ் அலையன்ஸ் உடன் இந்த ஒத்துழைப்பு மூலம், உலக அளவிலான நவீன தொழில் நுட்பங்களை வகுப்பறைக்குள் கொண்டு வர முடிகிறது” என்றார்.


இந்த லேப் மூலம் மாணவர்கள் ரோபோடிக்ஸ், ட்ரோன் டெக்னா லஜி, ஏ.ஐ, டேட்டா சயின்ஸ் என பல துறைகளில் கற்றல் அனுபவம் பெற வுள்ளனர். இந்நிகழ்வில் கிகானி குளோபல் அகாடமி முதல்வர் மிஸ்ஸ் சலினி நாயர், மெட்டாசேஜ் அலையன்ஸ் சி.இ.ஓ. டாக்டர் அகிலா முல்துராமலிங்கம், எம்.டி அனுஷ் ஜெயகுமார், உதவி பொதுமேலாளர் வசந்தசீலன் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img