fbpx
Homeபிற செய்திகள்வரும் 18ம் தேதி வேலூர் மாவட்ட அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

வரும் 18ம் தேதி வேலூர் மாவட்ட அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

மாவட்டங்கள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் வேலூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்க தகுதியான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க தலை வரும் நறுவீ மருத்துவமனை தலை வருமான முனைவர் ஜி.வி.சம்பத் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறிள்ளதாவது:
நடைபெற இருக்கும் மாவட்டங்கள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் வேலூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்க வேலூர் மாவட்டத்தில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்வதற்கான நிகழ்வு வரும் 18ம் தேதி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் சேண்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி வளாகத்தில் நடைபெறுகிறது.

அன்று காலை 9 மணிக்கு தொடங்கும் இத்தேர்வில் 16 வயது மற்றும் 19 வயது என இரு பிரிவாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 19 வயது பிரிவில் பங்கேற்க உள்ளவர்கள் 01.09.2006 அன்றோ அதற்கு பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 16 வயது பிரிவிற்கு 01.09.2009 அன்றோ அதற்கு பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். வீரர்கள் தேர்வுக்கு வருபவர்கள் கிரிக்கெட் சீருடை மற்றும் ஆதார் அட்டையுடன் வர வேண்டும்.

இது தொடர்பாக மேலும் தகவல் அறிய வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க கௌரவ சங்க செயலாளர் எஸ். ஸ்ரீதரனை மொபைல் எண்.70105 94657 மூலமாக தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img