Homeபிற செய்திகள்கோவை அரசு மகளிர் கலை - அறிவியல் கல்லூரிக்கு ரூ.12.90 கோடியில் புதிய கட்டிடம்: முதல்வர்...

கோவை அரசு மகளிர் கலை – அறிவியல் கல்லூரிக்கு ரூ.12.90 கோடியில் புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை புலியகுளத்தில், ரூ.12 கோடியே 90 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதியகட்டி டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இதையொட்டி கோவையில் புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி மேயர் ரங்க நாயகி ராமச்சந்திரன், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ),
மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணை யர் செந்தில் குமரன், ராமநாதபுரம் பகுதி திமுக செயலாளர் ப.பசு பதி, புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர். டி.வீரமணி, மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் முருகன், வட்டக் கழகச் செயலாளர் நவீன் முருகன், மாநகர் மாவட்ட தொண்டரணி தலைவர் ஆ.கண்ணன், கழக நிர்வாகிகள், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் 500 மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img