கடலூர் மாவட்டம்,சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும்,ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி,நிகழாண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று (சனிக்கிழமை) காலை 6.15 மணி அளவில் உற்சவ ஆச்சாரியர் ச.க.சிவராஜ தீட்சிதர் நடராஜர் சன் னதி எதிரே உள்ள கொடி மரத்தில் கொடியேற்றினார். கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, நாளை (ஜன.5) சந்திர பிரபை வாகன வீதியுலா, 6-ஆம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத் தில் வீதியுலா, 7-ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதியுலா உள்ளிட்டவை நடைபெறுகிறது.
இதையடுத்து,முக்கிய நிகழ்வான 12-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், ஜன.13-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, ஜன.14-ஆம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, ஜன.15-ஆம் தேதி தெப்போற்சவத் துடன் உற்சவம் நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் குழு செயலர் உ.வெங்கடேச தீட்சிதர்,துணைச் செயலர் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியர் ச.க.சிவ ராஜதீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் சிதம்பரம் நகர காவல்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ஆகியோர் நடராஜர் கோயிலில் பாதுகாப்பு பணிகளை செய்திருந்தனர்.



