ஸ்ரீஇராமகிருஷ்ணா இயன்முறை மருத்துவக் கல்லூரியின் 31-வது ஆண்டு பட்டமளிப்பு விழா, வேலும ணியம்மாள் கலையரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பேராசிரியர் வி.எஸ்.சீதாராமன் வரவேற்றார். அப்போது, பட்டதாரிகளை வாழ்த்தி குழுவாக இணைந்து பணியாற்று வதன் மூலம் அவர்களின் திறமைகளை மேம்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். இயன் முறை மருத்துவத்துறையின் வளர்ச்சிக் காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் மேற்கோள்காட்டினார்.
எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டி.லக்ஷ்மிநாரா யணசாமி தலைமை தாங்கி, பட்டதாரிகளை வாழ்த்தி பேசும்போது, ஆர்வம், விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்கும் திறன்களை மேம்படுத்தி சமூகத்திற்கு சிறந்த இயன்முறை மருத்துவராக விளங்க ஊக்குவித்தார். கடந்த ஆண்டு கால பயணத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா இயன்முறையை மருத்துவக் கல்லுரியின் முன்னேற்றமானது தரவரிசை மற்றும் அங்கீகாரத்தில் முன்னிலை வகிக்கிறது. கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளிலும் பல விருதுகளைப் பெற்றதாக மதிப்பிற்குரிய முதல்வர் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்தினர்.
சிறப்பு விருந்தினர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா இயன்முறை மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் டாக்டர் மாதவி கொனெட்டிகரி, 135 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசும்போது, பட்டதாரிகள் தங்கள் துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமையை மேம்படுத்த வலி யுறுத்தினார்.
இளங்கலை 2017-2021-ம் ஆண்டு மாணவி சி. நேகதர்ஷினி, முதுகலை 2019 – 2021-ம் ஆண்டு மாணவி மெர்சி ஜோசப் ஆகியோர் மிகசிறந்த மாணவிகளுக்கான பட்டதாரி விருதினையும் பதக்கத்தினையும் பெற்றனர். பல்வேறு பாடப் பிரிவுகளில் முதல் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
பேராசிரியர் கி. அமுதா நன்றி கூறினார்.