சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 62-வது பட்டமளிப்பு விழா ஸ்ரீ வள்ளியப்பா கலை அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் பி.குழந்தைவேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கோவை, கேம ரான் ஏ சிலம்பெர்கர் கம்பெனி மத்தியத் தலை வர் வீரபத்ரசுவாமி கௌரவ விருந்தினராக பங்கேற்று, முதல் ஐந்து இடங்களைப் பெற்ற 60 மாணவ, மாணவியர் உட்பட 851 பேருக்கு பட்டயச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
முதல்வர் முனைவர் வீ.கார்த்திகேயன் பேசியதாவது:
கல்லூரியின் புதுமையான கற்றல் முறைகள், சிறப்பான கட்டமைப்பு வசதிகள், தொழில் நிறுவனங்களுடனான கூட்டமைப்பு, வேலை வாய்ப்பு, கல்லூரியின் விருதுகள் ஆகியவை இங்கு சிறப்பாக உள்ளன.
பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மாணவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் பெற்றோரிடம் அன்புடனும், மரியாதை யுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
இன்று பட்டயம் பெறும் மாணவர்கள் சிறந்த வேலைவாய்ப்பினையும், உயர்கல்விக்கான வாய்ப் பினையும் பெற்றுள்ளனர். மாணவ, மாணவியர் சிறந்த தொழில் முனை வோர்களாக உருவாகி அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பினை வழங் குபவர்களாக உருவாக வேண்டும் என்றார்.
கல்லூரியின் தலைவர் சொ.வள்ளியப்பா பட்டம ளிப்பு விழாவினை துவக்கி வைத்து தலைமை தாங்கி பேசியதாவது: இக்கல்லூரி 5 வருடங்களாக சிறப்பான கல்வியை வழங்கி வருகிறது.
பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட் டியுள்ளது. மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியுடன் ஒழுக்கம் மற்றும் தன்னம் பிக்கையுடன் சிறந்த குடிமகனாக இருக்க வேண்டும்.
நேர்மையான அணுகுமுறை மற்றும் விடா முயற்சியுடன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.