fbpx
Homeபிற செய்திகள்உபாசி தலைவர், துணை தலைவர் தேர்வு

உபாசி தலைவர், துணை தலைவர் தேர்வு

உபாசி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உபாசியின் செயலாளர் ஆர்.சஞ்ஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் தாவது: உபாசி தலைவராக ஜெஃப்ரி ரெபெல்லோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காபி தோட்டக்காரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். தற்போது சக்லேஷ்பூரில் உள்ள தோட்டத்தை நிர்வகித்து வருகிறார். கடந்த 2006-2007 கர்நாடகா பிளாண்டர்ஸ் தலைவராகவும் பணிபுரிந்தார்.

உபாசியின் செயற்குழு உறுப்பினராகவும், காபி கமிட்டியின் சேர்மனாகவும் 2018-19, 2020-21 வரை பணியாற்றினார். மத்திய மாநில அரசு, காபி வாரியத்துடன் காபி தொடர்பான பிரச்சினைகளை எடுத்துச் சென்று தீர்வு காண உதவியுள்ளார்.

உபாசியின் துணைத் தலைவராக ஸ்ரீதரன் சந்திரன் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
வுட்பிரியர் குழுமத்தின் இயக்குநராக உள்ளார். தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் இக்குழுமத்தைச் சேர்ந்த தோட்டங்களில் இருந்து 15 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய் யப்படுகின்றன.

மற்ற தோட்டப்பயிர்கள், காப் பீடு, விருந்தோம்பல் ஆகி யவற்றிலும் இக்குழு கவனம் செலுத்துகிறது. லண்டனில் நடந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் திட்டத்தில் பங்கேற்றார்.

உபாசி தேயிலைக் குழுவில் 2019-20, 202122 ஆகிய ஆண்டுகளில் தலைவ ராக இருந்தார். உபாசி செயற்குழு மற்றும்தேயிலை குழுவிலும் அவர் பங்கேற்பு இருந்தது.

தமிழ்நாடு பிளாண்டர்ஸ் அசோசியேஷன், கோயம் புத்தூர் டீ டிரேட் அசோசியேஷன் தலைவ ராகவும் பணி புரிந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img