கோவை, துடியலூர் வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதிய நவீன அலுமினிய மறுசுழற்சி-இன் குபேஷன் மையம் திறப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர்.அலமேலு, முன்னிலை வகித்தார். இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர் ப. கருப்பசாமி வரவேற் றார். கழிவு மேலாண்மை தொழில்நுட்பங்கள், மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள், டிஎஸ் டியின் பல்கலைக்கழக அமைப்பு திட்டங்களில் தொழில்நுட்பத்தை செயல் படுத்தும் மையங்களின் உறுப்பினர் செயலராக இருக்கும் விஞ்ஞானி-, டாக்டர் கிருஷ்ணகாந்த் புலிச்சேர்லா அலுமினிய மறுசுழற்சி மையத்தை திறந்து வைத்தார்.
நாட்டின் வேகமான நகரமயமாக்கல், உயர் தொழில்மயமாக்கல், பொ ருளாதார சுதந்திரம் மற்றும் உள்நாட்டுமயமாக்கல் (ஆத்மநிர்பர் பாரத் அபி யான்) காரணமாக இரும்பு, தாமிரம், டைட்டானியம் போன்ற பொருட்களுக்கு அடுத்தபடியாக அலுமி னியம் மதிப்புமிக்க வள மாக மாறியுள்ளது.
அலுமினியம் மற்றும் அதன் உலோகக் கலவைகள் முதன்மையாக வாகனம், விண்வெளி, கடல், உள் கட்டமைப்பு, ஆற்றல் பரிமாற்றங்கள், வணிகப் பொருட்கள் மற்றும் இயந்திரத் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.
மஹாராஷ்டிராவின் ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, சுரங்க அமைச்சகத்தின் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் கழிவு மேலாண்மை தொழில்நுட்பங்களின் திட்டங்களின் கீழும் மற்றும் நிர்வாகத்தின் பங் களிப்புடன் சுமார் மூன்று கோடி நிதியில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரிய நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் அலுமினிய ஸ்கிராப்புகளை மறுசுழற்சி செய்ய ஸ்டார்ட் அப்களை இன்குபெட் செய்து தயாரிப்பு உற்பத்தியை ஊக்குவிக்க இம் மையம் உறுதுணையாக இருக்கும்.
முதன்மை ஆய்வாளரான மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இணைப் பேராசிரியர் முனைவர் பாக்யநாதன், துணை பேராசிரியர் சதீஷ், ஆராய்ச்சி மாணவர்கள் கவுதம், மெல்வின், ஸ்ரீநாத், சத்தியசீலன் பார்வையா ளர்களுக்கு அலுமினியக் ஸ்கிராப்புகள் உருகுவதைச் செய்து காட்டினர்.
கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ், அலுமினிய பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில்துறையினர், கொடிசியாவின் துணைத்தலைவர், எல் அண்ட் டி, ஷார்ப் இண் டஸ்ட்ரீஸ், அல்பாகிராப்ட் போன்ற தொழில் நிறுவன மேலாளர்கள் கலந்து கொண்டனர்.