கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி களில் மொத்தம் ரூ.4.38 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை செய்தியாளர் பயணத் தின்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சி யர் மா.அரவிந்த்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட் சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ், தடிக்காரன்கோணம் ஊராட்சி பகுதியில் மாநில உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை மற்றும் கீரிப்பாறை தொழிலாளர் காலனிக்கு செல்வதற்கு புதிதாக 2 பாலங்கள் அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பில் பயனாளி டயனா மேரி வீட்டின் பணி செயல் அளவில் முடிக்கப்பட்டிருந்ததோடு, ரூ.2.40 இலட்சம் மதிப்பில் மற் றொரு பயனாளியான தாவீது வீட்டின் பணி செயல் அளவில் முடிக்கப்பட்டிருந்ததும் ஆய்வு செய்யப்பட்டது.
15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.99 இலட்சம் மதிப்பில் மண்புழு உரம் கொட்டகை அமைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, பணியினை விரைந்து ஆரம்பிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
தடிக்காரன்கோணம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2006-ல் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உணவு அருந்தும் கட்டிடத்தில் பழுதடைந்துள்ள உணவு அருந்தும் மேசைகள் மற்றும் டைல்ஸ் சரி செய்ய வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அருமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் கழி வறை, வேதியியல் ஆய்வுக்கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்திலுள்ள சமை யலறை ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங் கப்படும் உணவின் தரம் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது.
மாணவ, மாணவிகள் சாப்பிடும் முன் பொறுப்பு ஆசிரியர் பரிசோ தனை மேற்கொள்வதோடு, ஒவ்வொருநாளும் மாதிரி உணவினை சேமித்து வைக்க அறி வுறுத்தப்பட்டது.
ரூ.1.92 இலட்சம் மதிப்பில் வீரவநல்லூரில் கிடைமட்ட உறிஞ்சுகுழி அமைக்கும் பணி முடிக்கப்பட்டிருந்தது. ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
இறச்சக்குளம் ஊராட்சி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.27 இலட்சம் மதிப்பில் இறச்சக்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட பணியினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ரூ.4.29 இலட்சம் மதிப்பில் இறச்சகுளம் பிளசன்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் நடைபாதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈசாந்திமங்கலம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடப் பணி என மொத்தம் ரூ.4.38 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு செய்தியாளர்கள் பயணத்தின்போது மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரி வித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்றத் தலைவர் பிராங்கிளின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர், உதவி பொறி யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.